கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தில், பழனி என்பவரின் இரண்டு மகன்கள் வீட்டிற்கு முன்பாக உள்ள வடிகால் வாய்க்காலின் அருகில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது குழந்தை சாய்ரக்சன் தவறி வாய்க்காலில் விழுந்தது. தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பிறகு குழந்தையை சடலமாக மீட்டனர். இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.