கடலூர்: ஒரே நாளில் 468 மனுக்கள் குவிந்தது

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த மொத்தம் 468 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார். வழக்கமாக மாதம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் இந்த கூட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி