ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் வந்தடைந்த போது பாலமுருகனின் கால் நடைமேடையில் மோதியது. இதில் கால்கள் துண்டாகி நடைமேடை மற்றும் ரயிலின் இடையில் சிக்கிக் கொண்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க உயிரிழந்தார்.
உடனே ரயில்வே காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மாம்பலம் ரயில்வே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.