கடலூரில் 'என் ஊர் என் கனவு 2030' தொலைநோக்கு வியூகம் மற்றும் திட்ட ஆவணம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன், ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் எம்எல்ஏக்கள் கலந்துகொண்டு வியூகங்கள் குறித்து விவாதித்தனர். இந்த கருத்தரங்கம் எதிர்கால வளர்ச்சி திட்டங்களை வகுக்கும் நோக்கில் நடைபெற்றது.