புதுச்சத்திரம்: சேவல் சண்டை 2 பேர் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சின்னாண்டிக்குழி முந்திரி தோப்பில் தடையை மீறி சேவல் சண்டையில் ஈடுபட்ட இருவர் போலீசாரைப் பார்த்ததும் தப்பியோடினர். உடன் போலீசார் அவர்களை பிடித்தனர். விசாரணையில் கொள்ளிடம் அடுத்த புத்துரைச் சேர்ந்த ரவி மகன் சக்திவேல், கடலூர் முதுநகர் ராஜேஷ் என்பது தெரிந்தது. உடன் காவல் துறையினர் 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி