சிதம்பரம் அருகே அத்திப்பட்டு - பூலாமேடு கிராமங்களுக்கு இடையே உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க, தலை மற்றும் கை சிதைந்த நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மிதந்து கிடந்தது. குமராட்சி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமராட்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.