இந்த நிலையில் லால்புரம் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர், சிதம்பரம் சார் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து ஊராட்சியை நகராட்சியுடன் இணைக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். பின்னர் இதுகுறித்து நூதனமான முறையில் அவர்கள் முதல்வருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்தையும் நடத்தினர்.
இந்த நிலையில் ஊராட்சியை நகராட்சியுடன் இணைப்பதைக் கண்டித்து லால்புரம் ஊராட்சியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று மணலூர் நெடுஞ்சாலையில் ஓரமாக அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.