கடலூர் மாவட்டத்தில் பரவலாக கனமழை பெய்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (03.12.2025) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். எனவே, மாணவர்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.