கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வந்தது. இந்த நிலையில் நேற்று 30 ஆம் தேதி கடலூர் பகுதியில் 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை, பரங்கிப்பேட்டை பகுதியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளதால் மக்கள் அவதி அடைந்தனர்.