வழக்கமாக 10 பேர் வரை வேலை செய்யும் இந்த வெடிமருந்துக் கூடத்தில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் லதா மட்டுமே பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் வெடி தயாரிப்புக் கூடத்தில் நாட்டுவெடி தயாரித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அவர் அமர்ந்து வேலை செய்துகொண்டிருந்த வெடிமருந்துக் கூடம் இடிந்து சுக்கு நூறானது.
இந்த சம்பவத்தில் தொழிலாளி லதா உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். சிதறிய லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.