இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள சிதம்பரத்தின் கமலீசுவரன் கோயிலில், தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உழவாரப் பணி நடைபெற்றது. இக்கோயில் வளாகம் மற்றும் பின்புறப் பகுதிகள் முட்புதர்கள், செடிகொடிகள் அகற்றப்பட்டு, நீரால் கழுவி சுத்தம் செய்யப்பட்டன.