சிதம்பரம்: எம்பி திருமாவளவன் அறிக்கை வெளியீடு

சென்னை மெரினாவில் நேற்று நடந்த விமான சாகசத்தை காண லட்சக்கணக்கானோர் திரண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி 5 பேர் பலியாகினர். இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

விமானப்படை சாகச நிகழ்ச்சியை காண வந்த 5 பேர் பலியான விவகாரத்தில் உயர்மட்ட விசாரணை தேவை, நிகழ்ச்சி ஏற்பாட்டில் குறைபாடுகள் ஏதும் இருந்ததா? என விசாரித்து காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், வெயிலின் கொடுமையில் பலியானவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும், கூட்ட நெரிசலால் அல்ல வெயிலின் தீவிரத்தால் உண்டான நீர்ச்சத்து குறைவு காரணமாகவே உயிரிழப்பு என தெரிய வந்துள்ளது, வெயிலின் கொடுமையால் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி