சிதம்பரம்: ஆய்வக உதவியாளர் பணியிடை நீக்கம்

சிதம்பரம் அடுத்த சி. முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே கல்லூரியில் வேதியியல் துறை ஆய்வக உதவியாளர் சிதம்பரநாதன் என்பவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்தார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சிதம்பரநாதனை கைது செய்தனர். இந்நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது சம்பந்தமாக சென்னை கல்லூரி கல்வி ஆணையாளர் சுந்தரவள்ளி விசாரணை நடத்தினார். இதை தொடர்ந்து சிதம்பரநாதனை பணியிடை நீக்கம் செய்து அவர் உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி