புவனகிரி: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள சாத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் இவருடைய மகன் அருள்செல்வன் இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் அருள்செல்வன் அதே ஊரில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். 

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருள்செல்வன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த புவனகிரி காவல் துறையினர் அருள்செல்வனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மேலும் இது குறித்த புகாரின் பேரில் புவனகிரி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அருள்செல்வன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி