இந்நிலையில் இன்று காலநிலை மாறி புவனகிரி பகுதியில் கடும் வெயில் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் மழையில் நனைந்த நெல்மணிகளை அங்குள்ள பணியாளர்கள் உலர வைத்து வருகின்றனர். தற்போது உலர வைக்கப்பட்டு வரும் நெல்மணிகள் சுமார் 400 மூட்டைகள் இருக்கும் என கூறப்படுகிறது. மழையில் போதிய பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வந்த இந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வியர்வை சிந்தி உழைத்துப் பயிரிட்ட நெல்மணிகளை மழையில் நனைய வைத்து தற்போது மீண்டும் வெயிலில் உலர வைக்கும் அவல நிலையை விவசாயிகள் வேதனையோடு கண்டித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்