ஆன்லைன் விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி நேற்று மருந்து கடைகள் மூடப்பட்டன. கடலூர் மாவட்டத்தில் 1,450 மருந்துகடைகளில் 1,250 கடைகள் மூடப்பட்டதால் மருந்து வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தலைவலி போன்றவற்றுக்கு மருந்துகள் வாங்க முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.