கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவிய வறண்ட வானிலைக்குப் பிறகு, இன்று கடலூர், சிதம்பரம், புவனகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.