சேத்தியாத்தோப்பு: சிறுமி கர்ப்பம்; கொத்தனார் மீது வழக்கு

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பூண்டி பகுதியை சேர்ந்த பன்னீர் இவருடைய மகன் அய்யப்பன் கொத்தனார். இவர் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். தற்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். 

இது பற்றி அறிந்ததும் காட்டுமன்னார்கோவில் ஊர்நல அலுவலர் சுமதி சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் அய்யப்பன் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி