கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கன்னிக்கோவில் தெருவைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிலம்பரசி, குடும்பப் பிரச்சனை காரணமாக கடந்த 30 ஆம் தேதி பூச்சிக்கொல்லி மருந்து குடித்தார். சிதம்பரம் அண்ணாமலைநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.