மனித சங்கிலி போராட்டத்திற்கு எம்எல்ஏ அழைப்பு

திமுக அரசால் உயர்த்தப்பட்ட சொத்து வரியை திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பில் வருகின்ற 8 ஆம் தேதி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற உள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம், திட்டக்குடி, புவனகிரி, பெண்ணாடம், கெங்கைகொண்டான், மங்கலம்பேட்டை, சேத்தியாதோப்பு ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது. இதில் அதிமுகவினர் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி