கடலூர் மாவட்டம் புவனகிரியில் கண்ணதாசன் இலக்கியப் பேரவை 32 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவர் கதிரவன் சிறப்பு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். மேலும் பேரவை நிர்வாகிகள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.