புவனகிரி: போலி மருத்துவர் கைது

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள பிரசன்னா ராமாபுரம் பகுதியில் உரிய மருத்துவம் படிக்காமல் முதியவர் ஒருவர் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புவனகிரி வட்டார மருத்துவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து புவனகிரி வட்டார மருத்துவ அலுவலர் முத்துக்குமரன் இதுகுறித்து மருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். 

அதன்பேரில் போலீசார் தகவல் கிடைக்கப்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரசன்னா ராமாபுரம் பாவாடைராயன் கோவில் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி மகன் பன்னீர்செல்வம் என்பவர் உரிய மருத்துவம் படிக்காமல் தனது வீட்டில் வைத்து அப்பகுதி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர் அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மருந்து, மாத்திரைகள், ஊசி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி