புவனகிரி: லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

கடலூர் மாவட்டம் புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் காவல் துறையினர் பயணியர் விடுதி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த மேல்புவனகிரி தாகம் குளத்து தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி, ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த ராதா மகன் சுமன் ஆகிய 2 பேரையும் புவனகிரி காவல் துறையினர் கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி