பரங்கிப்பேட்டை: குட்கா விற்றவர் கைது

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அடுத்த வல்லம் கிராமத்தில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் சப் இன்ஸ் பெக்டர் செந்தில்குமார் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெட்டிக்கடையை ஆய்வு செய்தனர். சோதனையில் பெட்டிக் கடையில் 5 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் கடைக்காரர் சிவ சண்முகத்தை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி