மதுரையில் இருந்து இன்று (அக்., 11) சென்னைக்கு 74 பயணிகள், 5 பணியாளர்களுடன் வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சாதுர்யமாக செயல்பட்ட விமானி பத்திரமாக தரையிறக்கியதால் பயணிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, பின் விமானத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சீர் செய்யும் பணியில் அதிகாரிகள், விமான குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.