புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள உதயசூரியபுரம் என்னும் பகுதியில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுவை காதல் ஜோடி புதைக்க முயற்சித்துள்ளனர். அப்போது சிசுவின் அழுகுரல் கேட்ட அக்கம்பக்கத்தினர், குழந்தையை மீட்ட போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் குழந்தையை கொலை செய்ய முயன்ற காதலன் சிலம்பரசன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சிகிச்சையில் உள்ள குழந்தையுடன் பெண் வினோதினி இருப்பதால், சிறிது நாட்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்படவுள்ளார்.