கோவை: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சகோதரர்கள் வினோத் மற்றும் கனகராஜ். கனகராஜ், தர்ஷினி ப்ரியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இதை எதிர்த்த வினோத், தம்பதியை 2019-ல் ஆணவக்கொலை செய்தார். கைதான வினோத் குற்றவாளி என இன்று (ஜன. 23) நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வழக்கில் மூவர் விடுவிக்கப்பட்டனர். ஜன. 29-ல் தண்டனை குறித்து வாதங்கள் கேட்கப்படும் நிலையில் குற்றவாளிக்கு மரண தண்டனை தரலாம் என நீதிபதி கூறினார்.