மதுரை அலங்காநல்லூர் அருகே இன்று (நவ., 18) அதிகாலை சாலையின் குறுக்கே நாய் திடீரென பாய்ந்ததால் ஏற்பட்ட விபத்தில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர். சிக்கந்தர்சாவடியை சேர்ந்த வெங்கடசுப்பு, பத்மாவதி ஆகியோர் இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தனர். அப்போது தம்பதி மீது பேருந்து மோதியது. இந்த விபத்தில் நாயும் உயிரிழந்தது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.