தொகுதி பங்கீடு சர்ச்சை: முதலமைச்சர் ஸ்டாலின் இடத்திலிருந்து பார்க்கிறேன் - திருமாவளவன்

தொகுதி பங்கீட்டிற்காக கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என மிரட்ட தனக்கு தெரியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். காட்டுமன்னார் கோயிலில் இன்று (ஏப்.8) நடைபெற்ற பரப்புரையில் பேசிய அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சூழலை உணர்ந்து அவர் இடத்திலிருந்து பார்க்கிறேன். 7 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டதை நான் ஏற்றுக்கொண்டேன். கூட்டணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டே இணக்கமான முடிவை எடுத்தேன்" என விளக்கமளித்துள்ளார்.

நன்றி:SunNews

தொடர்புடைய செய்தி