கேரள மாநிலம் அரசுப் பேருந்தில் இருந்து கீழே தவறி விழச் சென்றவரை, பேருந்து நடத்துநர் மீட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பேருந்தில் பொருத்தப்பட்ட சிசிடிவிவில் பதிவான காட்சியில், "வேகமாக சென்றுக் கொண்டிருக்கும் அரசுப் பேருந்தில் பயணி ஒருவர் படி அருகே நின்றபடி பயணித்துக் கொண்டிருக்கிறார். ஒரு கையில் செல்போனுடன் பயணச்சீட்டு பெறுவதற்தாக நடத்துநரிடம் பணத்தை நீட்டும் போது நிலைத்தடுமாறி பேருந்தின் மேல்படியில் இருந்து கீழே விழுந்துள்ளார். துரிதமாக செயல்பட்ட நடத்துநர் கண்ணிமைக்கும் நேரத்தில் பயணியின் கையை பிடித்து அவரது உயிரை காப்பாற்றி உள்ளார்".