பொன்னேரி தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதன்படி, கல்லூரி மாணவர்கள், குடும்பத்தலைவிகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு மாதம் தலா ரூ.2,000 உதவித்தொகை வழங்கப்படும். மேலும், முதல்முறையாகச் சொத்து வாங்கும் பெண்களுக்குப் பத்திரப்பதிவு முற்றிலும் இலவசமாகச் செய்யப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.