கோபி அருகே அரக்கன்கோட்டை வாய்க்காலில் நண்பருடன் குளிக்கச் சென்ற கோவை சரவணம்பட்டி ஜனதா நகரைச் சேர்ந்த என்ஜினீயர் சித்துராஜ் (22) ஆழமான பகுதியில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சடலத்தை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மே 4 அன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.