வால்பாறை: கோடை சீசனால் போக்குவரத்து நெரிசல்

வால்பாறைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இங்குள்ள சோலையாறு அணை, கூழாங்கல் ஆறு போன்ற சுற்றுலாத் தலங்கள் அவர்களை வெகுவாக ஈர்க்கின்றன. பொதுவாக ஜூன் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைவாக இருக்கும். 

ஆனால் இந்த ஆண்டு, வழக்கத்திற்கு மாறான இதமான காலநிலை நிலவி வருவதால், சுற்றுலாப் பயணிகள் வால்பாறைக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக, மார்ச் மாத இறுதி வாரத்திலிருந்து வால்பாறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. 

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தொடங்கி, திங்கட்கிழமை காலை வரை சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதை, எஸ்டேட் சாலைகள் என எங்கு பார்த்தாலும் அணிவகுத்து நிற்கின்றன.

தொடர்புடைய செய்தி