ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் வழியில் வரையாடுகள் சாலையோரம் மேய்ந்து செல்வதால், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரையாடுகளைப் பார்த்து வாகனங்களை நடுரோட்டில் நிறுத்தி போட்டோ எடுப்பது அல்லது செல்பி எடுப்பது தவறானது. விலங்குகளைத் துன்புறுத்துவது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் என்று எச்சரித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வனவிலங்குகளைப் பாதுகாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றும், வனத்துறையின் அறிவுரைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி