இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வீசியது. சந்தேகமடைந்த பக்கத்து வீட்டினர் அங்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ரத்தினபுரி போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அழுகிய நிலையில் கிடந்த சடலத்தை மீட்டனர். பின்னர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் பாஸ்கரன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணமா? என ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.