கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அருகே குடிலில் தூங்கிக்கொண்டு இருந்த 4 வயது சிறுவனை புலி கடித்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர் கூச்சலிட்டதால் சிறுவனை கீழே போட்டுவிட்டு மிரண்டு போன புலி வனப்பகுதிக்குள் ஓடியது. புலி கடித்ததில் காயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான்.