இஸ்லாம் மார்க்கத்தில் ரமழான் மற்றும் பக்ரீத் ஆகிய இரண்டு பண்டிகைகள் முக்கிய பெருநாளாக கொண்டாடப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, இன்று ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையை கோவையில் உள்ள இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான ஜாக் அமைப்பினர் கொண்டாடினர். ரமழான் மாதம், இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.
ஆகவே, இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரமழான் பண்டிகையை இஸ்லாமியர்கள் கொண்டாடுகின்றனர். புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள், ஒருவரையொருவர் கட்டித் தழுவி ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.