இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி சங்கர் கோவைக்கு வந்தார். அலுவலகத்தில் கடந்த 27 ஆம் தேதி தனக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக கூறினார். உடனே அலுவலக ஊழியர்கள் போக்குவரத்து நெரிசல் இருப்பதை கண்டு பைக்கில் கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து அமெரிக்காவில் உள்ள அவரது மனைவி ராணி ராமசாமி மற்றும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கோவை விரைந்து வந்தனர். இன்று சங்கர் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இதுகுறித்து அவரது மனைவி ராணி ராமசாமி அளித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.