பின்னர், வெளியே செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அவிநாசி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அங்கு பெட்ரோல் நிரப்புவதற்காக மோட்டார்சைக்கிளின் இருக்கையைத் திறந்தபோது, பச்சை நிறத்தில் நீளமான ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பெட்ரோல் பங்க் ஊழியர் பாம்பு என்று சத்தமிட்டதும், நாகலட்சுமி மோட்டார்சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். இருக்கைக்குள் ஒளிந்திருந்த பாம்பு தானாக வெளியேறி, பெட்ரோல் பங்க் வளாகத்தில் ஊர்ந்து சென்று அருகிலுள்ள காலி இடத்திற்குள் மறைந்துவிட்டது. நாகலட்சுமியின் வீட்டின் அருகே காலி இடங்கள் உள்ளன. சமீபத்திய மழையின் காரணமாக, அந்த காலி இடங்களில் இருந்து பாம்பு வெப்பத்திற்காக மோட்டார்சைக்கிள் மீது ஏறி இருக்கைக்கு அடியில் பதுங்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்