அவர்களது காரை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது. கண்ணிமைக்கும் நேரத்தில் மர்ம கும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதைத் தடுக்க முயன்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்தவெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். கொலை செய்துவிட்டு சேலம் நோக்கிச் செல்லும்போது சித்தோடு அருகே உள்ள பச்சப்பாளி என்ற இடத்தில் காவல்துறையினர் 4 பேரைக் காலில் சுட்டுப் பிடித்தனர். அவர்கள் நாலுபேரும் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினரும் தொடர்ந்து இதுகுறித்து கோவையில் மருத்துவமனையில் உள்ள அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்