கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், யாருக்கும் பாரமில்லாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் தேடியும் சடலம் கிடைக்கவில்லை.
நேற்று (ஜூலை 31) காலை மின் மயானம் அருகே சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.