கோவை: ஆனைமலை ஆற்றில் முதியவர் தற்கொலை

பொள்ளாச்சி அருகே ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்த கனகராஜ் (வயது 70) என்ற முதியவர், ஆனைமலை ஆற்று பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக தெரியவந்தது. ரத்தக்கொதிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர், உடல்நிலை மோசமாகி மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.

கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், யாருக்கும் பாரமில்லாமல் தற்கொலை செய்ய முடிவு செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தீயணைப்பு துறையினர் மூன்று மணி நேரம் தேடியும் சடலம் கிடைக்கவில்லை.

நேற்று (ஜூலை 31) காலை மின் மயானம் அருகே சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, போலீசார் உடலை மீட்டு வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி