கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றம் கடந்த 17ஆம் தேதி ஆட்சியர் அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டது. நேற்று நீதிமன்ற ஊழியர்கள் காவல்துறை பாதுகாப்புடன் வந்ததால் அலுவலகத்தில் பதற்றம் நிலவியது.
துறை அதிகாரிகளுடன் மாலைவரை பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில் வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால் ஜப்தி நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.