இதுகுறித்து வாளையார் காவல் நிலையத்தில் திவ்யா மேரி புகார் அளித்தார். சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் நடத்திய விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது கோவை பி.என்.புதூர் சீரநாயக்கன்பாளையம் அடிகளார் தெருவைச் சேர்ந்த அபிலாஷ் மற்றும் தொண்டாமுத்தூர் குரும்பபாளையம் வேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த தரணி என்பது தெரியவந்தது.
அபிலாஷ் மீது தமிழகத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், தரணி மீது போக்சோ வழக்கு ஒன்று உள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கேரள மாநிலம் வாளையார் காவல்துறையினர் கோவைக்கு வந்து நேற்று இருவரையும் கைது செய்தனர்.