மதுக்கரை வனப்பகுதியில் கருவுற்ற நிலையில் இருந்த பெண் காட்டு யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. வனத்துறையினர் நடத்திய பிரேதப் பரிசோதனையில், யானையின் உடலில் வெளிப்புறக் காயங்கள் எதுவும் இல்லை என்பதும், சுமார் 13 மாத வளர்ச்சியடைந்த சிசு வயிற்றில் இருந்தது என்பதும் தெரியவந்தது. கடந்த வாரம் சேற்றில் சிக்கிய அதே யானை இது என்றும், உடல் உறுப்புகள் செயலிழந்ததால் உணவு உட்கொள்ளாமல் இறந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.