கோவை: பாலியல் தொழில்; பெண் புரோக்கர் உட்பட 4 பேர் கைது

கோவை சிங்காநல்லூர் நஞ்சப்பா நகரில் உள்ள ஒரு வீட்டில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை நடத்தினர். அதில், அந்த வீட்டில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து விபசாரம் நடத்தியது தெரியவந்தது. 

இதனையடுத்து சிங்காநல்லூர் போலீசார் விபசார புரோக்கர்களான சென்னை தி நகரை சேர்ந்த சபியுல்லா(54), மேற்கு வங்காளத்தை சேர்ந்த தப்ஜானி(33), செகந்திராபாத்தை சேர்ந்த 27 வயது மற்றும் கிழக்கு கோதாவரியை சேர்ந்த 32 வயது பெண் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள பாலாஜி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி