அதனை பெற்றுக்கொண்ட இருவரும் மீண்டும் தங்களுக்கு சிக்கன் மற்றும் ஆம்லெட் தருமாறு கேட்டனர். இதற்கு மறுப்பு தெரிவித்த ராமச்சந்திரனிடம் இருவரும் தகராறு செய்தனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி ராமச்சந்திரனை உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதனைத்தடுக்க முயன்ற ராமச்சந்திரனின் சகோதரரையும் தாக்கினர். பின்னர் அவர்களை மிரட்டிவிட்டு இருவரும் காரில் தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஓட்டல் உரிமையாளரை தாக்கியது ராமநாதபுரம் கமுதியை சேர்ந்த சக்திவேல்(23), துடியலூரை சேர்ந்த பஹீம்அஹமத் (24) என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை