தர்ப்பணம் செய்யும் இடமும் மழைநீரால் சூழப்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2019-ல் நல்லறம் அறக்கட்டளை சார்பில் பேரூர் நொய்யல் ஆற்றின் அருகே இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான 5.5 ஏக்கர் நிலத்தில் புதிய தர்ப்பண மண்டபம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று(பிப் 6) புதிய தர்ப்பண மண்டபம் இந்து சமய அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர், இந்து அறநிலையத் துறை துணை ஆணையர் ரமேஷ் மற்றும் உதவி ஆணையர் விமலா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். முன்னதாக தர்ப்பண மண்டபத்தில் சிறப்பு யாகம் செய்யப்பட்டது.