கோவை: அரசு அடுக்குமாடி குடியிருப்பில் கொள்ளை – 6 பேர் கைது

கோவை கவுண்டம்பாளையத்தில் அரசு அலுவலர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் 56 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை வழக்கில் போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஆசிப், கல்லு ஆரிப், இர்பான் ஆகியோர் களத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டில் ஆசிப் உயிரிழந்தார். கொள்ளையர்களுக்கு உதவிய ஆட்டோ ஓட்டுநர் ஆயுப்கான் மற்றும் திட்டம் தீட்டிய தாவூத், பர்மான் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். பர்மான் இறந்த ஆசிபின் தம்பி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி