கடந்த மூன்று நாட்களாக கடும் வெயிலால் வாடிய கோவை புறநகர் பகுதிகளில் நேற்று (ஜூலை 31) மாலை திடீரென கனமழை பெய்தது. கருமத்தம்பட்டி, சோமனூர், கணியூர், மாதாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. இதனால் நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. மழையால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் தங்குதடையின்றி வெளியே சுற்றிச் சென்றனர்.