இவர்களிடமிருந்து 130 போலி பான் கார்டுகள், 69 சேர்க்கை படிவங்கள், ஒரு மடிக்கணினி, 6 செல்போன்கள் மற்றும் போலி பான் கார்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இந்த கும்பல் பெற்று கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒரு கார்டுக்கு ரூ. 5 ஆயிரம் வரை பெற்றுள்ளதாகவும், இதில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் என்றும் கூறப்படுகிறது. வெளிமாநில நபர்கள் யார், எந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் அடையாள அட்டைகள் பெறுவது தீவிர கண்காணிப்பில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
மின்சார வாரிய பணிகள் குறித்து அமைச்சர் நிர்மல்குமாருக்கு செந்தில் பாலாஜி விளக்கம்